இளைஞனே! - III
சுகம் கண்டு மயங்காதே
வலி கண்டு கலங்காதே
ஒரு நொடி வலி
ஓராயிரம் சுகத்தைக்
கொல்லும்!
ஒரு நொடி சுகம்
ஒரு கோடி வலியை
வெல்லும் !
சுகமும் வலியும்
மானுடத் தராசின்
இரு தட்டுகள் !
பாராட்டுகளைப் பெறப்
போராடுவது-சுயநலம்.
போராடியே பாராட்டுவது
சுயபலம் !
பாராட்டுகளும்
போராட்டங்களும்-ஒரு
நாணய இரு பக்கங்கள்!
No comments:
Post a Comment