Tuesday 8 March 2011

இளைஞனே! - III






சுகம் கண்டு மயங்காதே
வலி கண்டு கலங்காதே

ஒரு நொடி வலி
ஓராயிரம் சுகத்தைக்
கொல்லும்!
ஒரு நொடி சுகம் 
ஒரு கோடி வலியை
வெல்லும் !

சுகமும் வலியும்
மானுடத் தராசின் 
இரு தட்டுகள் !

பாராட்டுகளைப் பெறப் 
போராடுவது-சுயநலம். 
போராடியே பாராட்டுவது 
சுயபலம் !

பாராட்டுகளும் 
போராட்டங்களும்-ஒரு 
நாணய இரு பக்கங்கள்!

No comments:

Post a Comment