Wednesday 9 March 2011

நீயும்!




மேக கூட்டத்தினிடையே
வெட்கப்பட்டுப் பதுங்கும்
வெண்மதி போன்று தானடி - நீயும்
வெட்கும்போது!

தீண்டல்களால் உணர்ச்சிகளைத்
தூண்டிவிட்டு ஓடி மறையும்
தென்றல் போன்று தானடி - நீயும்
தீண்டும்போது!

அடாத மழையிலும்
விடாது அதிரும்
இடியேறு போன்று தானடி - நீயும்
கோபிக்கும்போது!

உடலெங்கும் நில்லாது
பாய்ந்தோடி உயிரூட்டும்
உதிரம் போன்று தானடி - நீயும்
முத்தமிடும்போது!

ஆதவனின் கதிர்வீச்சை
தணித்து நிழல் தரும்
விருட்சம் போன்று தானடி - நீயும்
வருடும்போது

இதயத்தில் மலர்ந்து
மணம் பரப்பும் பூவினைப்
பறிப்பது போன்று தானடி - நீயும்
பிரியும்போது!

No comments:

Post a Comment