காதல்...காமம்!
காதல் பிழை செய்யாமல்
காம மழை பெய்யாமல்
உலகினில் உயிர்களில்லை
உணர்ச்சி எழாதவள்
பெண்ணில்லை..
புணர்ச்சி தழுவாதவன்
ஆணில்லை!
மென்மையாய்க் கொல்லாதது
பெண்மையில்லை...
உண்மையாய் வெல்லாதது
ஆண்மையில்லை!
சூழ்ந்து முடிச்சிடாதோள்
பெண்ணவளில்லை...
ஆழ்ந்து முத்தெடுக்காதோன்
ஆண் மகனில்லை!
பேரின்பம் அடையாதவள்
பெண்ணில்லை...
ஐம்புலனின்பம் அறியாதவன்
ஆணில்லை!
நேசங்கள் சொலப்படாதது
காதலில்லை...
வேசங்கள் புலப்படாதது
காமமில்லை!
No comments:
Post a Comment