அழகு தேவதை!
அன்ன நடை போட்டு
அழகு தேவதை வருகிறாள்...!
ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்
அடங்கிப் போகும்!
தகதகக்கும் மேனியால்
பிரபஞ்சத்தின் மௌனமும்
உடைந்து போகும்!
மூச்சுக்காற்றின் வெளிப்பாட்டில்
அண்டங்களின் சராசரமும்
தெளிந்து போகும்!
புன்னகையின் மௌவலில்...
பூங்கொத்துகள்
உதிர்ந்து போகும்!
காந்த விழி வீச்சில்
புவியீர்ப்பு விசையும்
உறைந்து போகும்!
செவ்வாயின் எச்சிலும்
செவ்வாய் கிரகத்தின்
நீராய் மாறும்!
முகத்தின்வசீகரத்தில்
முழுமதியும் நாணத்தில்
மங்கிப்போகும்!
துள்ளும் முன்னெழில்
கலைமானின் வரிகளையும்
மறையச் செய்யும்!
இடைமுகத்தின் ஒற்றைக்கண்
மது நிரப்பிய கோப்பையையும்
தோற்கச் செய்யும்!
அசைந்தாடும் பின்னெழில்
இசை மீட்டும் யாழையும்
மயங்கச் செய்யும்!
வெண் பஞ்சுப் பாதங்கள்
தண்மை மலரையும்
ஏங்கச் செய்யும்.
ஆம்!
அன்ன நடை போட்டு
அழகு தேவதை வருகிறாள்
ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்
அடங்கிப் போகும்!!
No comments:
Post a Comment