Tuesday 8 March 2011

"உணர்வுகள்"!




சுவாசக் காற்று கரைவதாய்
மூச்சு நெருப்பு அணைவதாய்
பேச்சு நீர் வற்றுவதாய்
இதய மலை உடைவதாய்
மனப் பாலைவனம் அழிவதாய்
நரம்பு காடு எரிவதாய்
கனவு வானம் மறைவதாய்
கற்பனை நிலம் சிதைவதாய்
எண்ணக் கடல் தொலைவதாய்
எழுத்து அலை கலைவதாய்
இரத்தவானில் உறைவதாய்
கவிதை புதையல் களைவதாய்
உடல் சிற்பம் உடைவதாய்
உயிர்ப் பறவை அலைவதாய்
ஓர் உணர்வு.

வெளிப்படையாய் அழைத்த
வசந்தம்....
அடிப்படை வாழ்வின் சுகந்தம்....

ஆதியிலே அவிழ்த்த ஆனந்தத்தை
பாதியிலே அணைத்ததால்!!

No comments:

Post a Comment