Wednesday 9 March 2011

ஒரு காதலன் - தன்காதலிக்காய் !


வழி மீது விழி வைப்பதா?
விழியினுள் வழி பார்ப்பதா!

இதயத்தில் இறங்கி
ஆரிக்கிள் வென்ட்ரிக்கிள்
அறைகளில் நம் காதலை 
எழுத வேண்டும்.

உயிரின் கருவே!
கனவுகளின் ராகங்களில் 
நீ பேசுகிறாய்...
கவிதைகளின் மரபுகளில் 
நீ ஆர்ப்பரிக்கிறாய்!

சந்தித்த பொன் தருணங்களைச் 
சிந்திக்கையில் கண்கள் அருவியாய்...!

வார்த்தைகள் தேய்பிறையாய்...
வருத்தங்கள் வளர்பிறையாய்..!

கவலைகளில் கண்களுக்கும்.. வலிகளில்
இதயத்திற்கும் தலைமைப் பதவி!

மனதைச் சுற்றிச் சுவருமில்லை...
இருளில்லா இரவுமில்லை!
காற்றில்லா மரமுமில்லை...

நீயில்லா உயிரில் ஈரமுமில்லை!

No comments:

Post a Comment