Tuesday 8 March 2011


கல்லறைக் காதல்!





அமாவாசை பௌர்ணமியில்
வெண்மதிக் கடலிடை காதல் பூத்து
அலைகள் மோதல் போல்வதே...!

இளவேனிற் பனிக்காலத்தில்
நின் கண் என்னிடைக் காதல் பூத்து
மென்மையாய்ச் சாதல் செய்கிறதே!

சிந்தனைச் சிதறலில்
கருத்துகள் சேமித்துக் கவிகாணும்
கவிஞனது கவனம் போல்வதே...!

புன்னகைப் பூக்களால்
பொன்னகை செய்வித்துப் புவியாளும்
நின்னினைவுகள் மௌனம் புரிகிறதே!

காலத்தின் கோலங்களில்
இடிந்து வீழ்ந்த கிணற்றினில்
ததும்பும் நீர் போல்வதே...!

கனவுகளின் ராகங்களில்
எனைப் புரியா உன்முகம்
கல்லறையிலும் கரையாமல் தெரிகிறதே!

No comments:

Post a Comment