நல் பூவே!
இதயத்திற்கும் இதயத்திற்கும்
இடைவெளியில் நடப்பட்ட செடியே!
அன்பில் படர்ந்த கொடியே?
அற்புதமாய் மலர்ந்த நல் பூவே?
விழியோரம் வழிந்தோடும்
வெள்ளித்துளிகள் ஆழப்பதிந்த
அன்னியோன்ய அடைமழையாய்...
உயிரின் மூச்சுகள்
அவிழ்ந்து விடாதா...என
ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிப் பெருக்கு!
இருளை அடக்கிய இரவுகளில்
மௌனம் சேமித்துத் துயிலும்
ஜீவராசிகளின் மத்தியில்...
கடமை தவறாது எழுதும்
கவிஞனின் மௌனத்தை
உடைத்து விடுகிறாய் - நீ!
நினைவில் புது உதயம்
இரவில் ஒரு பிரளயம்
காதல் கூட விரயம்...!
இடைவெளியில் நடப்பட்ட செடியே!
அன்பில் படர்ந்த கொடியே?
அற்புதமாய் மலர்ந்த நல் பூவே?
விழியோரம் வழிந்தோடும்
வெள்ளித்துளிகள் ஆழப்பதிந்த
அன்னியோன்ய அடைமழையாய்...
உயிரின் மூச்சுகள்
அவிழ்ந்து விடாதா...என
ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிப் பெருக்கு!
இருளை அடக்கிய இரவுகளில்
மௌனம் சேமித்துத் துயிலும்
ஜீவராசிகளின் மத்தியில்...
கடமை தவறாது எழுதும்
கவிஞனின் மௌனத்தை
உடைத்து விடுகிறாய் - நீ!
நினைவில் புது உதயம்
இரவில் ஒரு பிரளயம்
காதல் கூட விரயம்...!
No comments:
Post a Comment