விட்டு விட்டு வீசும்
தென்றலொன்று முகத்தில் அறைய..
கருங்குயில் ஒன்றின்
கீதம் காதை முத்தமிட...
இதோ..
உளியின் விளிம்பில்
செதுக்கப்படக் காத்திருக்கும்
சிற்பமொன்றின் பிம்பம்-
விழிகளின் உள்ளே!..
நடுங்கிப் போகிறது
நெஞ்சம்..
கல்லின் பிரசவ சப்தம்!!!
நன்றி.
முதற்சங்கு&எதிர்நீச்சல்
அன்பரே,கவிதை மிக நேர்த்தியாக உள்ளது.எனக்குத் தெரியும் நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று.வாழ்த்துக்கள்.
ReplyDelete