Wednesday 9 March 2011

ஒரு காதலி-தன்காதலனுக்காய்!



என்னவனே! எந்தன் 
மன்னவனே!

இதயத்தில் பின்னிய 
வலைகளில் சிக்குண்டே 
கிடக்கின்றேனோ - இன்னமும்!

வார்த்தைகளில் உனைத் 
தேடுகிறேன்..நீயோ 
அர்த்தங்களில் புதைந்து 
கிடக்கிறாய்!

கவிதைகளில் உனைப் 
பார்க்கிறேன்..நீயோ 
கண்ணீரில் கரைந்து 
போகிறாய்!

தனிமைகளில் உனை
வேண்டுகிறேன்..நீயோ 
இனிமையில் உறைந்து 
நிற்கிறாய்!

இரவுகளில் உனை 
நினைக்கிறேன்..நீயோ 
இருளினில் தொலைந்து 
போகிறாய்!

உணர்ச்சிகளில் உனை 
தீண்டுகிறேன்..நீயோ
உயிருக்குள் நிறைந்து 
கிடக்கிறாய்!

No comments:

Post a Comment