Monday 7 March 2011

 கண்ணியமே!


பொழுதுகள் முழுதும்
இறுக்கத்தோடு கழிவதில்
பொருத்தம் நீளுமா?

சிரிப்போடும் சிந்தனையோடும்
திருப்பங்கள் நிறைந்ததே
மனங்களின் வருத்தம் நீக்கி
மனித வாழ்வின் விருப்பங்களைக்
கூட்டும்!

வார்த்தை அம்பு
வாழ்க்கை அன்பைத் துளைக்கும்.
அன்பின் வலி - இன்ப மயக்கம்!
அம்பின் பலி - துன்பக் கலக்கம்!

கலங்கிய கண்களைவிட
மயங்கிய கண்களில்தான்
மோகம் தோன்றும்!

சோகம் கொண்ட
இல்லறம் உயிரற்றது.
மோகம் தீண்டும்
நல்லறம் உன்னதம்!

உன்னதப் பரிணாமம்
உயிரின் பிரளயம்!
காதலும் காமமும்
கண்ணியமே...நம்பிக்கையும்
நன்னடத்தையும் சிதையாத வரை!

No comments:

Post a Comment