Monday 7 March 2011

 அத்தான்!



சைவம் கொண்டவுன்
அசைவக் கண்களின் ஊடுருவல்கள்
தசைகளுக்குள் புகுந்த முதல்நொடியின்
இசைகள் இன்னுமென் குருதியில்!

தீண்டிப் போன விரல்களும்
தாண்டவம் செய்த இதழும்
யாண்டும் எந்தன் சுகமே!

மார்பின் மீது கண்விழித்து
அயர்வேன்; பரியந்தமில்லாயென்
ஆர்வங்களையெல்லாம் நிதமும்
கூர் தீட்டி உரசுவேன்!

குளிரோடு இதம் சேர்த்து
களியூட்டும் எனை அள்ளி
ஒளியூட்டும் உன் காதல்!

அத்தான் என்றேங்குமெனை
பித்திகமாய் வருணித்து
கொத்திடும் உன் காமம்!

No comments:

Post a Comment