Wednesday 9 March 2011

முடிவுகளுக்கான முதல் ஞாபகமென..!







கவிதை நாக்கால் ருசியறிந்து 
அணுத்துகள் சிதைத்துத் தாண்டிய விழியம்பால் 
கிழித்துக் கொண்ட கனவின் 
கடைசிப் பாடல்!

அது 
சருகுகளின் நுனியில் உடையும் 
தூசுப்படிமங்களின் சல்லடைக்குள் 
பலியிடப்பட்ட விதியின் 
சப்தநாடிகள் ஓய்வெடுக்கும் 
கிரகங்களில் ஒலிக்கிறது.

அங்கே- ஒரு எச்சத்தின் மிச்சத் துளியில் 
எறும்பின்  கால்தடம் 
நுண்நுட்பமாய் தேய்ந்து 
எரிகிறது... முடிவுகளுக்கான 
முதல் ஞாபகமென!!!

நன்றி,
எதிர்நீச்சல்&முதற்சங்கு.

No comments:

Post a Comment