Wednesday 9 March 2011

புரட்சிகளில் பயணித்து...!




குளிர்வாட்டிடும்
காலைப் பொழுதுகளில்
தளிர் ஊட்டிடும்
சோலை வனமாய்...!

கண்களில் அழகிய
கவிதை பதுக்கி
இதயத்தில் அற்புத
இன்பம் செதுக்கி...!

இனிதாய் வரவேற்கும்
இந்திரவில் பெண்ணே!

என் உணர்ச்சிகளைக்
கிளர்ச்சியடையச் செய்யாதே!

நான் மலர்ச்சிகளைத் தேடி
வறட்சிகளின் பாதையில்
புலர்ச்சிகளை நோக்கி
புரட்சிகளில் பயணித்து
எழுச்சிகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment